Thursday, December 19, 2013

DTAX கிளை மாநாடு!

              திருச்சி DTAX கிளையின் மாநாடு 18-12-2013  அன்று மாலை 05:00 மணி அளவில் கிளை தலைவர் தோழர் தமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது. 
             கிளை மாநாட்டில் மாநில துணை செயலர் தோழர். சுந்தரம், மாநில துணை தலைவர் தோழர் மனோகரன், மாவட்ட செயலர் தோழர். பழனியப்பன், மாவட்ட  தலைவர் தோழர். சுந்தரவேல், மாவட்ட பொருளர் தோழர். ஆறுமுகம் மாவட்ட துணை செயலர்கள் தோழர்கள் பாலகுரு, மில்ட்டன், ஜவஹர், துணை தலைவர் தோழர். சுப்ரமணியன், அமைப்பு செயலர். தோழர் லோகநாதன் மற்றும் கிளை செயலர்கள் உள்ளிட்ட பலர் மாநாட்டில் கலந்து கொண்டனர். 
             புதிய பொறுப்பாளர்கள் தேர்வில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் கிளை செயலர் பொறுப்புக்கு மட்டும் தேர்தல் நடந்தது. மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் தோழர்கள் சுந்தரவேல், ஆறுமுகம், லோகநாதன் ஆகியோர் தேர்தலை நடத்தினர். 
              தோழர்கள் T.கண்ணன், M.சித்திராஜ் ஆகியோர் கிளை செயலர் பொறுப்புக்கு போட்டியிட்டனர். 
     தோழர் கண்ணன் அவர்கள் வெற்றி பெற்றார். 

தலைவராக தோழர் மில்டன், பொருளாராக தோழர் ரெங்க பிரசாத் உள்ளிட்ட மற்ற பொறுப்பாளர்கள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். 
             புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பிலான வாழ்த்துக்கள்.

மாநாட்டு பதிவுகள். . .






1 comment:

PSYCHOLOGIST said...

Best Wishes for New elected Branch office bearers.

Fraternally Yours,
R.Gopinath
TTA/Trichy