Saturday, October 20, 2018

வெற்றிகரமான மாவட்ட செயற்குழு!

நமது மாவட்ட செயற்குழு 16/10/2018 காலை 1030 மணியளவில் மாவட்ட தலைவர் தோழர் சுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தோழர். M பாலகுரு அவர்கள் அஞ்சலியுரை ஆற்ற, தோழர் மில்டன் அனைவரையும் வரவேற்றார்.
தோழர் செம்மல் அமுதம் மாவட்ட செயற்குழுவை துவக்கி வைத்து, 3வது சம்பள மாற்றம், டவர்கள் தனியாரிடம் விடப்பட்டது, வருங்கால போராட்ட அறிவிப்பு குறித்து உரையாற்றினார்.

மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன் ஆய்படுபொருளை அறிமுகம் செய்து வைத்து அமைப்பு நிலை விவாதத்தை துவக்கி வைத்தார். கிளைச்செயலர்கள், மாவட்ட சங்க நிர்வாகிகள் தங்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை முன்வைத்தனர்.
மாநில உதவி தலைவர்கள் தோழர் சேதுபதி, தோழர் ஆறுமுகம் பங்கேற்று திருச்சி SSA வில் NFTE சங்கத்தின் வளர்ச்சிக்கான தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். 
இறுதியில் நமது தமிழ் மாநில செயலர் தோழர் நடராஜன் அவர்கள் விழா நிறைவு பேருரையாற்றினார். சமீபத்தில் நடந்த மாநில LJCM முடிவுகள், சம்பள மாற்றம், வருங்கால போராட்டங்கள் குறித்தும , உறுப்பினர்கள் விவாதத்தின் ஊடே எழுப்பிய பல்வேறு சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்து சிறப்புரையாற்றினார்.
மாவட்ட பொருளர் தோழர்.ஆண்டிசாமி நன்றி கூற செயற்குழு நிறைவடைந்தது.

  • ஆளில்லாத தொலை பேசி நிலையங்களுக்கு மற்றும் செக்யூரிட்டி பணிக்கு முழு நேர ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்த வேண்டும்
  • பவர் பிளான்ட் மற்றும் பாட்டரி ஆகியவற்றை மாற்றி சேவையை மேம்படுத்த வேண்டும்.
  • பழுதடைந்துள்ள அம்மாபட்டினம் ஜெயந்கொண்டம் உள்ளிட்ட தொலை பேசி நிலையங்களை உடனடியாக சரி செய்யவேண்டும்.
  • காத்திருப்பு பட்டியலில் உள்ள தோழர்களுக்கு மாற்றல் வழங்க வேண்டும்.
  • சேவை மேம்பாட்டிற்காக கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது 
  • ஊதிய மாற்றம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக அனைத்து சங்க (AUAB) அறிவித்துள்ள போராட்டங்களை வெற்றிகரமாக நடத்துவது

உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.










No comments: