Sunday, September 2, 2012

நமது மாவட்ட சங்க பொறுப்பாளர்களில் ஒருவரும், திருச்சி மாவட்ட மகளிர் மைய உறுப்பினருமான தோழியர். முருகாயி அவர்கள் 31-08-2012 அன்று பணிஓய்வு பெற்றார். கரூர் கிளைகளின் சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. S பழனியப்பன், P.சுந்தரம், P.ஆறுமுகம், விமலாதித்தன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு பாராட்டினர்.

திருச்சி SDOT கிளையின் தலைவர் ந்தோழர்.கோவிந்தராஜ் அவர்கள் 31-08-2012 அன்று பணிஓய்வு பெற்றார். அவரது இல்லத்தில் நடைபெற்ற விழாவில் S பழனியப்பன், P.சுந்தரம், P.ஆறுமுகம், S.காமராஜ், BSNL-SEWA கருப்பையா  உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு பாராட்டினர்.
திருச்சி DTAX கிளையின் தலைவர் தோழர் சங்கர் பணிஓய்வு பெற்றதை அடுத்து, 01-09-2012 அன்று கிளை மாநாட்டில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. S பழனியப்பன், P.சுந்தரம், S.சுந்தரவேல், P.ஆறுமுகம், Y.மில்டன், கமலநாதன், தமிழ்ச்செல்வன்  உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு பாராட்டினர். 

No comments: