'மறந்து கொண்டே இருப்பது  மக்களின் இயல்பு
          நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே  இருப்பது எம் கடமை"
  இன்று பாரதி நினைவு தினம்.!
| 1. |   தொண்டு செய்யும் அடிமை!-உனக்குச் சுதந்திர நினைவோடா? பண்டு கண்ட துண்டோ?-அதற்குப் பாத்திர மாவாயோ?  |              
                                    (தொண்டு) | 
|    2.  | 
           ஜாதிச் சண்டை போச்சோ?-உங்கள் சமயச் சண்டை போச்சோ? நீதி சொல்ல வந்தாய்!-கண்முன் நிற்கொ ணாது போடா!  |              
                                    (தொண்டு) | 
|    3.  | 
           அச்சம் நீங்கி னாயோ?-அடிமை! ஆண்மை தாங்கி னாயோ? பிச்சை வாங்கிப் பிழைக்கும்-ஆசை பேணுத லொழித் தாயோ?  |               
                                    (தொண்டு) | 
|    4.  | 
           கப்ப லேறு வாயோ?-அடிமை! கடலைத் தாண்டு வாயோ? குப்பை விரும்பும் நாய்க்கே-அடிமை! கொற்றத் தவிசுமுண் டோ?  |               
                                    (தொண்டு) | 
|    5.  | 
           ஒற்று மைபயின் றாயோ?-அடிமை! உடம்பில் வலிமையுண் டோ? வெற்றுரை பேசாதே!-அடிமை! வீரியம் அறிவாயோ?  |               
                                    (தொண்டு) | 
|    6.  | 
           சேர்ந்து வாழு வீரோ-உங்கள் சிறுமைக் குணங்கள் போச்சோ? சோர்ந்து வீழ்தல் போச்சோ?-உங்கள் சோம்பரைத் துடைத்தீரோ?  |              
                                    (தொண்டு) | 
|    7.  | 
           வெள்ளை நிறத்தைக் கண்டால்-பதறி வெருவலை ஒழித்தாயோ? உள்ளது சொல்வேன் கேள்-சுதந்திரம் உனக்கில்லை மறந்திடடா!  |              
                                    (தொண்டு) | 
|    8.  | 
           நாடு காப்ப தற்கே-உனக்கு ஞானம் சிறிதுமுண்டோ? வீடு காக்கப் போடா!-அடிமை! வேலை செய்யப் போடா;  |              
                                    (தொண்டு) | 
|    9.  | 
           சேனை நடத்து வாயோ?-தொழும்புகள் செய்திட விரும்பாயோ? ஈன மான தொழிலே உங்களுக்கு இசைவதாகும் போடா!  |               
                                    (தொண்டு) | 
No comments:
Post a Comment