'மறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு
நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே இருப்பது எம் கடமை"
இன்று பாரதி நினைவு தினம்.!
1. | தொண்டு செய்யும் அடிமை!-உனக்குச் சுதந்திர நினைவோடா? பண்டு கண்ட துண்டோ?-அதற்குப் பாத்திர மாவாயோ? |
(தொண்டு) |
2. |
ஜாதிச் சண்டை போச்சோ?-உங்கள் சமயச் சண்டை போச்சோ? நீதி சொல்ல வந்தாய்!-கண்முன் நிற்கொ ணாது போடா! |
(தொண்டு) |
3. |
அச்சம் நீங்கி னாயோ?-அடிமை! ஆண்மை தாங்கி னாயோ? பிச்சை வாங்கிப் பிழைக்கும்-ஆசை பேணுத லொழித் தாயோ? |
(தொண்டு) |
4. |
கப்ப லேறு வாயோ?-அடிமை! கடலைத் தாண்டு வாயோ? குப்பை விரும்பும் நாய்க்கே-அடிமை! கொற்றத் தவிசுமுண் டோ? |
(தொண்டு) |
5. |
ஒற்று மைபயின் றாயோ?-அடிமை! உடம்பில் வலிமையுண் டோ? வெற்றுரை பேசாதே!-அடிமை! வீரியம் அறிவாயோ? |
(தொண்டு) |
6. |
சேர்ந்து வாழு வீரோ-உங்கள் சிறுமைக் குணங்கள் போச்சோ? சோர்ந்து வீழ்தல் போச்சோ?-உங்கள் சோம்பரைத் துடைத்தீரோ? |
(தொண்டு) |
7. |
வெள்ளை நிறத்தைக் கண்டால்-பதறி வெருவலை ஒழித்தாயோ? உள்ளது சொல்வேன் கேள்-சுதந்திரம் உனக்கில்லை மறந்திடடா! |
(தொண்டு) |
8. |
நாடு காப்ப தற்கே-உனக்கு ஞானம் சிறிதுமுண்டோ? வீடு காக்கப் போடா!-அடிமை! வேலை செய்யப் போடா; |
(தொண்டு) |
9. |
சேனை நடத்து வாயோ?-தொழும்புகள் செய்திட விரும்பாயோ? ஈன மான தொழிலே உங்களுக்கு இசைவதாகும் போடா! |
(தொண்டு) |
No comments:
Post a Comment