Sunday, October 13, 2013

சிறப்பு மிகு கரூர் கிளை மாநாடுகள்!

ஒரு மாவட்ட மாநாட்டை போன்ற மிக சிறந்த ஏற்பாடுகளுடன், சுமார் 150 தோழர்கள் திரளாக கலந்துகொண்ட எழுச்சி மிகு கிளை மாநாடாக கரூர் Indoor, Outdoor, SDOT & அரவக்குறிச்சி கிளைகளின் மாநாடு கரூர் பஜார் தொலைபேசி நிலையத்தில் 12-10-2013 அன்று நடைபெற்றது. 
கரூர் பகுதியின் மூத்த தோழர் பாண்டியன் அவர்கள் கொடி ஏற்றதுடன் தோழர் ஞானவேல் அவர்களின் கொள்கை முழக்கத்துடன் மாநாடு துவங்கியது.
மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன் அவர்கள் மாநாட்டை துவங்கிவைத்தார். 
துணை பொது செயலர் தோழர் மதிவாணன் அவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பான எழுச்சியுரையாற்றினார். திருச்சி மாவட்டத்தின் மூத்த முன்னோடி தோழர் RV சிறப்புரையாற்றினார்.மாநில த்துணை செயலர்கள் தோழர்கள் சுப்பராயன், சுந்தரம், AIBSNLOA மாவட்ட செயலர் தோழர் காமராஜ், AIBSNLEA கிளை செயலர் தோழர் விமலாதித்தன், மாவட்ட தலைவர் தோழர். சுந்தரவேல், மாவட்ட துணை செயலர்கள் பாலகுரு, மில்டன் குளித்தலை மற்றும் புதுக்கோட்டை கிளை சங்க பொறுப்பாளர்கள் சேஷாத்திரி , முத்து உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். 

புதிய கிளை சங்க பொறுப்பாளர்கள் ஒரு மனதாக தேர்வு செய்ய பட்டனர். அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பான நல்வாழ்த்துக்கள்.

மாநாட்டு பதிவுகள் சில. . .








மேலும் மாநாட்டு பதிவுகள் இங்கே. . .

No comments: