Wednesday, October 9, 2013

எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்!

தேசிய செயற்குழு முடிவின்படி கோரிக்கை ஆர்ப்பாட்டம் திருச்சி PGM அலுவலக வாயிலில் மிகவும் எழுச்சியுடன் இன்று (09-10-2013) பிற்பகல் 01:30 மணியளவில் நடைபெற்றது. 

           மாவட்ட தலைவர் தோழர்.சுந்தரவேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன் அனைவரையும் வரவேற்று துவங்கி வைத்தார்.

           கரூர் தோழர் ஞானவேல் அவர்கள் எழுச்சிமிகு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார். 

          போராட்ட கோரிக்கைகளை விளக்கி மாநில துணை செயலர் தோழர் சுந்தரம், மாநில துணை தலைவர் தோழர் மனோகரன், மாவட்ட துணை செயலர் தோழர் பாலகுரு ஆகியோர் பேசினார்

          AIBSNLOA மாவட்ட செயலர் தோழர் காமராஜ் அவர்கள் நமது போராட்டத்தை வாழ்த்தினார். 

         நிறைவாக மாவட்ட பொருளர் தோழர் ஆறுமுகம் அவர்கள் நன்றி கூறி முடித்துவைத்தார். 

       மாவட்டம் முழுதும் இருந்து சுமார் 150 தோழர்கள் கலந்துகொண்ட எழுச்சி மிகு ஆர்ப்பாட்டமாக அமைந்தது.         

         NFTE சங்கத்தின் பிரதான தேர்தல் வாக்குறுதியான போனஸ் பிரச்சனையில் உடனடியாக தீர்வு காண அகில இந்திய சங்கம் முழு முயற்சி எடுக்க வேண்டும். ஒரு ஒன்றுபட்ட போராட்டத்திற்கு NFTE முன்முயற்சி எடுக்க வேண்டும் எனபது ஊழியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.


ஆர்ப்பாட்ட பதிவுகள்!
தோழர் சுந்தரவேல், மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையுரை

கரூர் தோழர் ஞானவேல் அவர்களின் எழுச்சிமிகு கோரிக்கை முழக்கம்.


மாவட்ட செயலரின் கோரிக்கை விளக்கவுரை.

மாநில துணை செயலர் தோழர் சுந்தரம் அவர்களின் கோரிக்கை விளக்கவுரை.

மாநில துணை தலைவர் தோழர் மனோகர் அவர்களின் கோரிக்கை விளக்கவுரை.

AIBSNLOA மாவட்ட செயலர் தோழர் காமராஜ் அவர்களின் வாழ்த்துரை 

மாவட்ட துணை செயலர் தோழர் பாலகுரு அவர்களின் கோரிக்கை விளக்கவுரை.

மாவட்ட பொருளர் தோழர் ஆறுமுகம் அவர்களின் நன்றியுரை.


No comments: