Monday, October 21, 2013

TMTCLU மாவட்ட செயற்குழு கூட்டம்!

             ஒப்பந்த ஊழியர் சங்க (TMTCLU) மாவட்ட செயற்குழு கூட்டம் 18-10-2013 அன்று மாலை 04:00 மணி அளவில் திருச்சி NFTE மாவட்ட சங்க அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தோழர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
               மாவட்ட செயலர் தோழர் மில்டன் தனது உரையில் அக்டோபர் முதல் நடைமுறைக்கு வரும் புதிய டெண்டர் விவரங்கள், EPF, ESI பிரச்சனைகள், தீர்ந்துள்ளவைகள்,  கொடுக்கப்பட வேண்டிய போனஸ், புதிய கிளைகள் உருவாக்கவேண்டிய அவசியம் உள்ளிட்டவைகளை விளக்கினார்.
               சிறப்பு அழைப்பாளர் தோழர் ஆனந்தன் அவர்கள், கடலூர் மாவட்டத்தில் ஒப்பந்த ஊழியர் பிரச்னை தீர்வு அனுபவங்கள், நீதிமன்ற அனுபவங்கள், டெண்டர் நடைமுறைகள், செய்யவேண்டியவை என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு அமசங்களை விளக்கி பேசினார்.
               NFTE மாவட்ட தலைவர் தோழர் சுந்தரவேல், மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன், மாவட்ட பொருளர் தோழர் ஆறுமுகம் மற்றும் மாநில துணை செயலர் தோழர் சுந்தரம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
               பிரதி மாதம் 10ம் தேதிக்குள் ஊதியம் அளிக்கப்படவேண்டும்,
ESI, EPF கணக்கிற்கு passbook வழங்கவேண்டும்,
தீபாவளி க்கு முன்பு Bonus வழங்கவேண்டும்,
ஊழியர், அதகாரிகள், ஒப்பந்த காரர் இணைந்த முத்தரப்பு கூட்டம் நடத்த வேண்டும்.  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
               நிறைவாக தோழர் பாலசுப்ரமணியன் அவர்கள் நன்றியுரை கூறினார்.




No comments: