GPF பிரச்னை!
நமது மாவட்டத்திற்கு GPF பட்டுவாடாவிற்காக கோரப்பட்ட தொகை ஒன்னரை கோடி ரூபாய். ஆனால் அனுப்பபட்டதோ 45 லட்ச ரூபாய் மட்டும் தான்! (கேட்டதில் 34 சதம் மட்டுமே!).
எனவே அவரவர் கேட்டதில் 34 சதவிதம் தொகை தற்பொழுது வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது. (ரூ.1000 கேட்டால் ரூ.340 மட்டும் கிடைக்கும்)
கல்யாணச்செலவுக்கும், கல்விக்கட்டணத்திற்கும் விண்ணப்பித்தவர்கள் செய்வதறியாது திகைத்துபோய் உள்ளனர்.
நமது அகிலஇந்திய தலைவர் தோழர்.இஸ்லாம் அஹ்மது அவர்கள் பிரச்சனை குறித்து ED (நிதி) சுஜாதா ரே அவர்களை CORPORATE அலுவலகத்தில் சந்தித்து GPF ன் தற்பொழுதைய நிலை குறித்து விவாதித்தார் .கூடுதல் நிதி ஒதுக்கிட வலியுறுத்தியுள்ளார்.
மீதமுள்ள GPF இந்த மாதத்தில் வருமா ... வராதா ? வந்தாலும் ....கேட்டது கிடைக்குமா ...குழப்பத்தில் ....ஊழியர்கள்!
No comments:
Post a Comment