Tuesday, September 9, 2014

மாவட்ட மாநாட்டு செய்திகள்!


நமது திருச்சி மாவட்ட 6 வது மாநாட்டு பணிகள் முழு வீச்சில் துவங்கிவிட்டது. அரியலூர் செயற்குழுவில் புதுக்கோட்டை கிளை மாவட்ட மாநாட்டை நடத்த ஏற்றுகொண்டது.
அதன்படி மாநாட்டு வரவேற்பு குழு அமைக்கப்பட்டுவிட்டது. 
வரவேற்பு குழு செயல்தலைவராக தோழர். A பழனிச்சாமி, STS (O) அவர்களும், பொதுசெயலராக தோழர். K ஆசைதம்பி, TM அவர்களும், பொருளராக தோழர். R சண்முகம், TM அவர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விளம்பர குழு தலைவராக தோழர். R ராஜேந்திரன், TM அவர்களும், 
உணவு குழு தலைவராக தோழர். P முத்து, TM அவர்களும்,
உபசரிப்பு குழு தலைவராக தோழர் V வேலு, TM அவர்களும் செயல்படுவார்கள்.

வரவேற்பு குழு தலைவராக முன்னாள் ரோட்டரி சங்க தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர், விவசாய சங்க மாவட்ட செயலராக இருந்து மறைந்த தோழர். சவரிமுத்து பிள்ளை அவர்களின் புதல்வருமான  Rtn. PHF. ச .சகாயம் அவர்கள் இசைவு தெரிவித்துள்ளார்.
நன்கொடை ரசீதுகள் கிளைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 
கிளை செயலர்கள் நன்கொடைகளை விரைந்து வசூலித்து அனுப்பவேண்டும்.
ஒரு மாத இடைவெளிக்குள் மாவட்ட மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  
செயற்குழுவில் அறிவிக்கப்பட்ட,  கிளை மாநாடு நடத்தவேண்டிய கிளைகள் உடன் நடத்திமுடிக்க வேண்டும்.

No comments: