Wednesday, October 15, 2014

சிறப்பான அகில இந்திய மாநாடு!

நமது அகில இந்திய மாநாடு மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் -ல் 10, 11, 12 ஆகிய நாட்களில் சிறப்பாக நடைபெற்றது. அகில இந்திய தலைவர் இஸ்லாம் அஹ்மத் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் சுமார் 3000 சார்பாளர்கள் கலந்துகொண்டனர். 

திருச்சி மாவட்டத்தின் சார்பில் 23 சார்பாளர்கள் கலந்துகொண்டனர். 

தோழர்கள் சபன் சக்கரவர்த்தி (AGS, BSNLEU), ஜெயப்ரகாஷ் (GS, FNTO), சுரேஷ் குமார் (GS, BSNLMS) GL.தார், AITUC செயலர். ஆகியோர் பொது அரங்கில் கலந்துகொண்டு மாநாட்டில் வாழ்த்துரை வழங்கினர்.
CMD திரு A N ராய் அவர்கள் மாநாட்டில் இரண்டாம் நாள் கலந்துகொண்டார். தலைவர்கள் BSNL ஊழியர்கள் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தீபாவளிக்கு முன்பு போனஸ் வழங்கவேண்டும் எனபது உள்ளிட்ட அனைத்தையும் CMD அவர்களிடம் எடுத்துரைத்தனர்.
CMD அவர்கள் தனது உரையில், நிறுவனம் மிகுந்த நிதி பிரச்சனையில் உள்ளது எனவும், சுமார் 2.5 கோடி மட்டுமே கையிருப்பு நிதியாக உள்ளது எனவும் ஊழியர்கள் நன்கு உழைத்து BSNL ஊழியர்கள் நன்கு உழைத்து வருவாயை அதிகபடுத்தினால் மட்டுமே 01-01-2017 -ல் சம்பள மாற்றம் சாத்தியம் எனவும். அது வரை ஊழியர் பிரச்சபிரச்சனைகளை மூட்டை கட்டி வைக்கவும் மார்ச் 2015 க்கு பிறகு பார்க்கலாம் எனவும் பேசினார்.
    இது சார்பாளர்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை உருவாகியது. வருவாய் இழப்பிற்கு ஊழியர்கள் ஒருபோதும் காரணம் இல்லை, மறுக்கப்படும் பட்சத்தில் போராட்டம் தவிர்க்க இயலாது என தலைவர் இஸ்லாம் எடுத்துரைத்தார்.                 

மாநாட்டில் கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஒருமனதாகத் 

தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தோழர் C.K. மதிவாணன், நிர்வாகிகள் பட்டியலை முன் மொழிந்தார்.

                      தலைவர்: இஸ்லாம் அகமது (டெல்லி)

                      பொதுச்செயலர்:சந்தேஸ்வர்சிங். (பீகார்)

                      பொருளாளர்: A.ராஜ்மௌலி (ஆந்திரா)

           உள்ளிட்ட 25 தோழர்கள் தேர்வு செய்ய பட்டனர். 
தமிழகத்தின் சார்பில் தோழர்கள். G ஜெயராமன், SSG ஆகியோர் செயலர்களாக தேர்வு செய்யபட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு நமது மனம்


 நிறைந்த வாழ்த்துக்கள்.











No comments: