Monday, July 25, 2016

வெற்றிகரமான வேலூர் மாநில மாநாடு!

ஜூலை 21,21 தேதிகளில் தமிழ் மாநில சங்கத்தின் 5 வது மாநில மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டு ஏற்பாடுகளை வேலூர் தோழர்கள் மிக நேர்த்தியாக, அழகுடன், சிறந்த விருந்தோம்பல் பண்புடன் கட்டுப்பாட்டுடன் நடத்திய விதம் அனைவராலும் பாராட்டப்பட்டது. 
 அகில இந்திய  செயலர் சந்தேஸ்வர் சிங், தலைவர் இஸ்லாம் அஹமது, செயலர்கள், ஜெயராமன், கோபாலகிருஷ்ணன், CK மதிவாணன், RK, கோஹ்லி, TEPU - சுப்பராமன், SEWA - PN பெருமாள், 
தமிழ்நாடு CGM பூங்குழலி, PGM (F) ரவி உள்ளிட்டோர் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 
நமது மாவட்டத்தில் இருந்து 100 க்கும் மேற்பட்ட தோழர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

மாநாட்டு கருத்தரங்கில் திருச்சி மாவட்ட செயலர் தோழர். S பழனியப்பன், கருத்துரை வழங்கினார்.

புதிய மாநில சங்க பொறுப்பாளர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.  
தோழர். P காமராஜ், பாண்டி, தோழர். K நடராஜன், தஞ்சை. தோழர். L சுப்பராயன், கோவை ஆகியோர் முறையே மாநில தலைவர், மாநில செயலர், மாநில பொருளர் ஆக தேர்வு செய்ய பட்டனர். 
நமது மாவட்டத்தை சேர்ந்த தோழர்கள் பி.ஆறுமுகம், கரூர், RM சேதுபதி, அறந்தாங்கி, ஆகியோர் துணை தலைவர்களாகவும், தோழர். K ஆசைத்தம்பி, புதுகை, சிறப்பு அழைப்பாளர் ஆக தேர்வு செய்ய பட்டனர்.
அனைவருக்கும் திருச்சி மாவட்ட சங்கத்தின் சார்பிலான வாழ்த்துக்கள். 
 மேலும் மாநாட்டு பதிவுகளை காண இங்கே சொடுக்கவும்.

No comments: