Saturday, March 11, 2017

சிறப்பான மாவட்ட செயற்குழு!


      நமது மாவட்ட சங்கத்தின் செயற்குழு கூட்டம் 06-03-2017 அன்று முசிறியில் சிறப்பாக நடைபெற்றது. தோழர்கள் ஜவஹர், திருப்பதி, அவர்களின் தலைமையில் மாவட்ட துணை செயலர் தோழர் மில்டன் அவர்களின் வழிகாட்டலில் முசிறி தோழர்கள் நல்ல முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். 
      22 கிளை செயலர்கள், 13 மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் , 5 சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற முழுமையான செயற்குழுவாக அமைந்தது. 
      மாவட்ட தலைவர் தோழர் சுந்தரம் தலைமையில், தோழர் ஜவஹர் வரவேற்புரையாற்ற தோழர் பாலகுரு அஞ்சலியுரையுடன் செயற்குழு தொடங்கியது. மாவட்ட செயலர் தோழர். S பழனியப்பன் அவர்களின் அறிமுக உரைக்கு பிறகு 20 கிளை செயலர்கள், 10 மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் பொருளாய்வு விவாதத்தில் கலந்துகொண்டனர்.

  • கிளை மாநாடுகள்,
  • ஒற்றை இலக்க உறுப்பினர் கிளைகள் இணைப்பு,
  • உறுப்பினர் மாற்றல் பிரச்சனைகள்,
  • பாட்டரி, பவர் பிளான்ட் பிரச்சனைகள்,
  • கேபிள் பழுதுகள்,
  • மொபைல் கவரேஜ்,
  • TOPUP கார்டு அளித்தலில் உள்ள குறைபாடு,
  • விஜய் ப்ராஜெக்ட் இன்சென்டிவ்,
  • NPC இன்சென்டிவ்,
  • உபகரணங்கள் வழங்கல் குறைபாடு,
  • கேபிள் கான்ட்ராக்ட் பிரச்சனை,
  • ஒப்பந்த ஊழியர்  பணி நேர உயர்வு மற்றும் கூலி உயர்வு,,
  • ஆளில்லா தொலைபேசியக செயல்பாடு,
  • மாவட்ட சங்க செயல்பாடு  
  • எதிர்நோக்கும் ஊதிய மாற்றம்,
  • எதிர்வரும் போராட்டங்கள் 
உள்ளிட்ட அனைத்தும் விவாதிக்கப்பட்டது.
      முசிறி துணைக்கோட்ட அதிகாரி திரு. கிருஷ்ணா சாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

     மாநில செயலர் தோழர். நடராஜன் அவர்கள் நடந்து முடிந்த அகில இந்திய செயற்குழு மற்றும் மாநில செயற்குழு முடிவுகளை விளக்கி சிறப்புரையாற்றினார். 09-03-2017 அனைத்து சங்க பேரணி, 16-03-2016 கோரிக்கை ஆர்ப்பாட்டம், தபால் அட்டை இயக்கம், ஊதிய மாற்ற பிரச்சனையில் மத்திய சங்க செயல்பாடுகள், மாநில மட்ட பிரச்னை தீர்வுகள் ஆகியவை பற்றி விளக்கி சிறந்ததொரு உரையை வழங்கினார்.
      தோழர் மனோகரன் அவர்களின் நன்றியுரையோடு செயற்குழு சிறப்பாக நிறைவுபெற்றது.
   






No comments: