Saturday, September 4, 2010

செப்டம்பர் 7 அகில இந்திய வேலை நிறுத்த விளக்ககூட்டம்!

திருச்சியில் செப்-4 அன்று அகில இந்திய வேலை நிறுத்த விளக்ககூட்டம் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. NFTE, BSNLEU, FNTO, SNEA & AIBSNLOA ஆகிய சங்கங்கள் இணைந்து நடத்திய கூட்டத்திற்கு தோழர்.அசலாம் பாட்சா, மாநில உதவி பொருளர், BSNLEU அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். தோழர்.S பழனியப்பன் மாநில உதவி செயலர்,NFTE அவர்கள் வரவேற்புரை  நல்கினார். தோழர்கள் அசோகன் மாநில செயலர், SNEA , S காமராஜ், மாநில உதவி செயலர்,AIBSNLOA, S.தமிழ்மணி, மாநில தலைவர்,NFTE, M.அப்துல் வாஹாப், மாநில தலைவர்,FNTO , மற்றும் நாராயணசாமி,மாநில உதவி செயலர்,BSNLEU ஆகியோர் விளக்கவுரை ஆற்றினர். இறுதியாக தோழியர் மீனாட்சி, மாவட்ட தலைவர்,FNTO , நன்றியுரை ஆற்றினர்.  கூட்டத்தில் சுமார் 200 தோழர்கள் மாவட்டம் முழுதும் இருந்து கலந்துகொண்டனர். கூட்ட புகைப்படங்களை பார்க்க இங்கே கிளிக் செயவும்.

No comments: