Friday, December 3, 2010

வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு!
டிசம்பர் 2 அன்று CMD , BSNL மற்றும் DOT செயலர் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் எட்டப்பட்ட கீழ்க்கண்ட முடிவுகளின் அடிப்படையில் நமது போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது!

1 , செல்பேசி கருவிகள் கொள்முதல்: 5 .5 லட்சம் இணைப்புகள் வழங்க தேவையான கருவிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் மேலும் 150 லட்சம் கருவிகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
2 . 78 .2 சத IDA இணைப்பு : உடனடி இணைப்பிற்கான ஊழியர் தரப்பு வாதங்களை முன்வைத்தால், அடுத்த BSNL இயக்குனர் கூட்டத்தில் பரிசீலித்து முடிவெடுக்கப்படும். 
3 . பங்கு விற்பனை, ஆட்குறைப்பு, BSNL கட்டமைப்புகளை தனியார்க்கு விடல் ஆகியவற்றில் அரசு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை.
4 . ITS அதிகாரிகள் உள்நுழைவு : அமைச்சரவை குறிப்புகள் தயாராகி வருகிறது. டிசம்பர் 2010 இறுதிக்குள் உரிய முடிவெடுக்கப்படும்.
5 . நிதியாதாரம்: அரசுடன் கலந்து பேசி கூடுதல் நிதி BSNL -க்கு பெற்றுத் தர  DOT செயலர் உறுதியளித்துள்ளார்.
6 . ஓய்வுதிய பிரச்சனை:  திருத்தப்பட்ட அமைச்சரவை குறிப்புகள் இறுதி வடிவம் பெற்று வருகிறது. டிசம்பர் 2010 இறுதிக்குள் உரிய முடிவெடுக்கப்படும்.

No comments: