சிறப்பான மாவட்ட செயற்குழு கூட்டம்!
நமது மாவட்ட செயற்குழு கூட்டம் முசிறியில் 09 - 03 -2012 அன்று மாவட்ட தலைவர் தோழர்.S . சுந்தரவேல் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட துணை செயலர்கள் தோழர். Y . மில்டன் அஞ்சலி உரை நிகழ்த்த, தோழர் M .பாலகுரு அனைவரையும் வரவேற்றார். மாநில துணை செயலர் தோழர்.P .சுந்தரம் தொடங்கி வைத்த அச்செயற்குழுவில் 25 கிளை செயலர்களும் 22 மாவட்ட சங்க பொறுப்பாளர்களும் 30 -கும் மேற்பட்ட பார்வையாளர்களும் கலந்துகொண்டனர். 37 தோழர்கள் விவாதத்தில் கலந்துகொண்டு பயனுள்ள ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்கினர். மாவட்ட செயலர் தோழர்.S .பழனியப்பன் தொகுப்புரை வழங்கினார். நிறைவாக மாவட்ட பொருளர்.தோழர்.P .ஆறுமுகம் நன்றியுரை ஆற்றினார். கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மேலும் புகைப்படங்களை பார்க்க இங்கே சொடுக்கவும்.
No comments:
Post a Comment