Wednesday, September 19, 2012

எழுச்சி மிகு ஆர்பாட்டம்!


       ITS அதிகாரிகள் உள்நுழைவு பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தியும், நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் BSNL நிவாகத்தை கண்டித்தும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் இன்று (18-09-2012) திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் மற்றும் துறையூர் ஆகிய மையங்களில் எழுச்சி மிகு ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.
      திருச்சி-ல் நடைபெற்ற ஆர்ப்பாட்ட நிகழ்வில் NFTE, BSNLEU, FNTO, TEPU, SNEA, AIBSNLEA, AIBSNLOA SEWA BSNL ஆகிய சங்கங்களை சார்ந்த சுமார் 200 தோழர்கள் கலந்து கொண்டனர். மற்ற இடங்களிலும் கணிசமான அளவில் தோழர்கள் கலந்து கொண்ட எழுச்சி மிகு ஆர்பாட்டங்கள் நடைபெற்றுள்ளது.

No comments: