Saturday, June 22, 2013

சாதனை புரிந்த ஏழை மாணவ மாணவியருக்கு ஊக்க பரிசு வழங்கிய விழா!

வறுமையை எதிர்கொண்டு உயர்கல்வி பெற ஞான தந்தை ஞானையா அளித்த   உதவித்தொகை வழங்கிய விழா!

அதிக மதிப்பெண் பெற்ற திருச்சி BSNL ஊழியர் குழந்தைகளுக்கு உற்சாக பரிசு வழங்கிய விழா!

சம்மேளன செயலர் தோழர் G ஜெயராமன் கலந்துகொண்டு வாழ்த்திய சிறப்பு விழா!


AIBSNLOA சங்கத்தின் சார்பாக சாதனை படைத்த ஏழை மாணவ மாணவியருக்கு ஊக்க பரிசு வழங்கிய விழா சிறப்பாகவும் நெகிழ்ச்சியுடனும் திருச்சி PGM அலுவலகத்தில் 21-06-2013 அன்று நடைபெற்றது. நமது மாக்சிய ஆசான் தோழர்.ஞானையா அளித்த கல்வி உதவித்தொகையை திருச்சி மாவட்ட அரசு பள்ளிகளில் படித்த ஏழை  ஏழை மாணவ மாணவியருக்கு வழங்கி நமது சம்மேளன செயலர் G ஜெயராமன் அவர்கள் வழங்கி பாராட்டுரை நிகழ்த்தினார்.

மாவட்ட தலைவர் தோழர்.C கிருஷ்ணன் DGM அவர்கள் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சமுக சிந்தனை உயிர்பியக்கதின் அமைப்பாளர் தோழர் M செல்வராஜ் அவர்களும், AIBSNLOA சங்கத்தின் தென்மண்டல அமைப்பு செயலர் தோழர்.குணசேகரன் அவர்களும் கலந்துகொண்டு பாராட்டுரை நிகழ்த்தினர். 

ஏழை குழந்தைகளின் கல்வி வளர்சிக்காக அர்பணிப்பு உணர்வுடன் செயல்பட்ட ஆசிரியை தோழியர் விஜயராணி அவர்களும் பாராட்டி கவுரவிக்கப்பட்டார்.

SEWA BSNL சங்க மூத்த முன்னோடி தோழர் நம்பியார், AIBSNLOA சங்க CWC உறுப்பினர் தோழர்.மனோகரன், தஞ்சை தோழர்கள் தங்கமணி, ஜெயராமன், NFTE சங்க மாவட்ட செயலர் பழனியப்பன், மாநில துணை செயலர் சுந்தரம், மாவட்ட துணை செயலர்கள் பாலகுரு, மில்டன் உளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 
அதிக மதிப்பெண் பெற்ற திருச்சி BSNL ஊழியர் குழந்தைகளுக்கு உற்சாக பரிசு வழங்கிய விழாவாகவும் இவ்விழா அமைந்தது. 

தொழிற்சங்க நிகழ்வுகளை தாண்டி சமுக மேம்பாட்டிற்கான செயல்களையும் செய்யவேண்டும் என்ற சிந்தனையுடன் விழா ஏற்பாடுகளை செய்த தோழர். காமராஜ் அவர்களின் பணி அனைவராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.

No comments: