Thursday, September 26, 2013

ஜுனாகத் மத்திய செயற்குழு முடிவுகள்

மத்திய சங்க செயற்குழு குஜராத் மாநிலம் ஜுனாக நகரில் செப் 24/25 தேதிகளில் சிறப்புற நடைபெற்றது. 

       ஊழியர் பிரச்சனைகள் மற்றும் அமைப்பை மேம்படுத்தும் வேலைகள் உள்ளிட்டவைகள் விரிவாக  விவாதிக்கப் பட்டுள்ளன.

       கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


  • புதிய போனஸ் கணக்கீடு உருவாக்கப்பட வேண்டும்.
  • இந்த ஆண்டு குறைந்த பட்ச போனசாவது வழங்கப்பட வேண்டும்.
  • STAGNATION - தேக்க நிலை அகற்றப்பட வேண்டும்.
  • LTC மற்றும் மருத்துவப்படிகளை மறுபடியும் வழங்க வேண்டும்.
  • 01/01/2007க்குப்பின் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்க வேண்டும். HRA 78.2 சத அடிப்படையிலேயே  வழங்க வேண்டும். 01/01/2007ல் இருந்து 78.2க்கான நிலுவை வழங்க வேண்டும்.
  • பிரதி மாதம் 12க்குள் GPF பட்டுவாடா செய்யப்பட வேண்டும்.
  • கருணை அடிப்படை வேலைக்கான 55 மதிப்பெண் முறை அகற்றப்பட வேண்டும். விரைந்து பணி நியமனம் செய்யப்பட வேண்டும்.
  • JAO/JTO/TTA/கேடர்களில் ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் வேண்டும்.
  • JTO ஆக OFFICIATING  செய்யும் TTAக்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.
  • மத்திய அரசு ஊழியருக்கு இணையான படிகள் ALLOWANCES வழங்கப்பட வேண்டும்.
  • TELECOM FACTORY பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.
  • நாலுகட்ட பதவி உயர்வின் நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.
  • SC/ST தோழர்களுக்கான  சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
  • NE-12 சம்பள விகிதத்திற்கு செல்லும் தோழர்களுக்கு 8 ஆண்டு கால சேவை நிபந்தனைகள் நீக்கப்பட வேண்டும்.


மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அக்டோபர் 2வது வாரம் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதம் உள்ளிட்ட இயக்கங்கள் நடத்துவது என முடிவு செயப்பட்டுள்ளது.

இயக்கங்கள் வெற்றிபெற செய்வோம்!

No comments: