Thursday, September 19, 2013

தேவ.பேரின்பன் மறைவு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில முன்னாள் துணைச் செயலாளர் தேவ.பேரின்பன் (61) செவ்வாய்க்கிழமை (செப்.17) காலமானார்.

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்தவர் தேவ.பேரின்பன். இளம் வயதில் இருந்தே கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்ந்து மக்களுக்காகப் பாடுபட்டவர்.

சமூக விஞ்ஞானம் என்ற மார்க்சிய ஆய்வு இதழின் ஆசிரியராகப் பொறுப்பு வகித்து வந்தார். சமீபகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை அவர் காலமானார்.

அவரின் இறுதி அஞ்சலி, புதன்கிழமை  பென்னாகரத்தில் உள்ள கரடிகுன்றில் நடைபெற்றது.

தேவ.பேரின்பன் மறைவுக்கு நமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.

No comments: