Sunday, October 13, 2013

கரூர் மாநாடு - தினமலர் செய்தி!

பதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2013,06:00 IST

கரூர்: தேசிய தொலைத் தொடர்பு ஊழியர்கள் சம்மேளன கரூர் கிளை ஆறாவது ஆண்டு விழா, பஜார் தொலைபேசி நிலையத்தில் நடந்தது.
விழாவை, பாண்டியன் கொடியேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் வரவேற்றார். ஆண்டறிக்கை, வரவு செலவு கணக்குகள், தீர்மானங்கள், புதிய நிர்வாகிகள் தேர்வுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, அகில இந்திய துணை பொதுச்செயலாளர் மதிவாணன் பேசினார்.
மாநில துணைத்தலைவர் சுந்தரம், மாவட்ட செயலாளர் பழனியப்பன், துணைத் தலைவர் ஜெயராஜ், கிளை செயலாளர்கள் ராமநாதன், ஞானவேல், பாலகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்

No comments: