Tuesday, October 1, 2013

 தோழர் பன்னீர்செல்வம் பணி ஒய்வு பாராட்டுவிழா!


ஜெயந்கொண்டம் பகுதியில் நமது இயக்கத்தின் ஆணிவேராக இருந்து செயல்பட்ட அருமை தோழர் பன்னீர்செல்வம் அவர்கள் 30-09-2013 அன்று பணி ஒய்வு பெற்றார். அன்று நடைபெற்ற பாராட்டு விழாவில் மாவட்ட செயலர் பழனியப்பன், மாநில துணை செயலர் சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்டு  வாழ்த்துரை வழங்கினர். விழாவில் அணைத்து சங்க பிரதிநிதிகள், மாநில அரசு ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அவரது உறவினர்கள் என திரளாக பலர் கலந்துகொண்டனர்.  நமது சங்கபிடிப்பின் வெளிப்பாடாக ரூபாய் 5000 -தை மாவட்ட சங்க வளர்ச்சி நிதியாக அளித்தார். அவரின் பணி ஒய்வு காலம் இனிதாக அமைய நமது நல்வாழ்த்துக்கள்!

பன்னீர் செல்வம் அவர்களுக்கு மாநில துணை செயலர் சுந்தரம் சால்வை அணிவித்து வாழ்த்தினார்.  உடன் இருப்பவர் மாவட்ட அமைப்பு செயலர் தோழர் அரியலூர் ஆறுமுகம்.                                                        

No comments: