Tuesday, October 1, 2013

காந்தி பிறந்த நாள் சிந்தனைகள்!


       "  தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்வது தான் அதி உன்னதமான அழியாத தற்காப்பு ஆகும். உடல் எப்படி தாக்குதலை சமாளிக்கப் போகிறது என்பதை விட உள்ளம் எப்படி சமாளிக்கப்போகிறது என்பதை வெளிக்காட்டுவது தான் தற்காப்புக்கலை.
         இதைத்தான் அனைவருக்கும் கற்பிக்க வேண்டும். தற்காலத்தில் தங்களை, எல்லாம் தெரிந்துவிட்ட பெரியவர்களாகக் கருதிக் கொள்கிற வழக்கம் நம் வாலிபர்களிடையே ஏற்பட்டிருக்கிறது. உண்மையான             
        தன்னடக்கமுள்ளவனுக்கு நாளுக்கு நாள் பலம் அதிகரித்துக் கொண்டே போகும்.
        அமைதியிலிருந்து அதிகமான அமைதிக்கு அவன் வளர்ந்து கொண்டே போகிறான்.
        எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதுதான் தன்னடக்கத்தின் முதற்படியாகும்.
        சத்தியத்தையும் அகிம்சையையும், பலிகொடுத்து விட்டு, அதனால் வரும் சுயராஜ்யத்தை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்."   -  காந்தி.


No comments: