Thursday, October 31, 2013

வெற்றிகரமான உண்ணா விரத போராட்டம்!

           மத்திய சங்க அழைப்பின் பேரில், நமது போனஸ் உரிமையை மீண்டும் பெற நாடு தழுவிய அளவில் நடைபெற்றுள்ள உண்ணா விரத போராட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சியில் போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 

          மாவட்ட தலைவர் தோழர் சுந்தரவேல் தலைமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டம் முழுதும் இருந்து 100 க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

         மாவட்ட துணை செயலர் தோழர் மில்டன் வரவேற்புரையாற்றினார்.

         மாநில துணை செயலர் தோழர் சுந்தரம் போராட்டத்தை துவக்கிவைத்தார். மாவட்ட செயலர் தோழர் பழனியப்பன், துணை செயலர்கள் தோழர்கள் பாலகுரு, மாதவன், மாவட்ட பொருளர் ஆறுமுகம், மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் ஆசைதம்பி, சுப்ரமணியன், ராமசந்திரன், திருநாவுகரசு மற்றும் கிளைசெயளர்கள் விளக்கவுரையாற்றி போனஸ் தேவையை வலியுறுத்தினர். 

        AIBSNLOA சங்கத்தின் மாவட்ட பொருளர் தோழர்.அசோக் குமார், மாவட்ட செயலர் தோழர். காமராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

       மாநில துணை தலைவர் தோழர் மனோகரன் நிறைவுரையாற்றினார். 

      இறுதியாக தோழர். பாலசுப்ரமணியன் அவர்கள் நன்றியுரை கூற, தோழர் காமராஜ் அவர்கள் பழச்சாறு வழங்கிட  உண்ணாவிரத போராட்டம் முடிவுபெற்றது.

             போராட்ட பதிவுகள். . . இங்கே 

 

 









 

















No comments: