Thursday, October 31, 2013

இது தமிழனின் தீபாவளி!

தீபஒளி 
பரபரப்பில் 
பற்றிக்கொண்ட 
விழாக்கால 
கடைகளையெல்லாம் 
வெள்ளக்காடாய் 
மிதக்கவைத்துவிட்டு 
வெளியேறி 
சொந்த ஊரு 
சென்றுவிட்ட 
என் தமிழ் 
இளைஞர்களைபற்றி 
உருமாறிப்போன 
வீதிகளும் 
பெருமூச்சு விட்டுக்கொண்டே 
ஒன்றுக்கொன்றாய் 
வினவிக்கொள்கின்றன 
அசுரனை 
கொன்றுவிட்ட 
இந்நாள்தான் 
இவர்களுக்கு 
இனியநாளாமென்று...!
=========================================================

? தீபாவளி ?


ஆண்கள் தோன்றி மிரட்டும்
நகை கடை விளம்பரங்கள்!
பெண்கள் பாடி ஆடும்
புடவை அறிமுகங்கள் !
வான் அலைகளில் வசிகரக் குரலில்
ஆசை வலை விரிப்புக்கள் !
முடிந்தவரை மொட்டை அடிக்கும்
மொக்கை போட்டிகள்!
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்
என்ற தூண்டில் இரைகள்!
பொடிப் பொடியாய் வெடித்துச் சிதறும்
வெடிகளில் கூட நடிகைகள் சிரித்தபடியே!
அப்பாவி பொதுஜனம் வாழ்க்கை மட்டும்
கேள்விக்குறியாய் வளைந்தபடியே!

No comments: