Monday, August 18, 2014

சிறப்பான மாவட்ட செயற்குழு!

நமது மாவட்ட செயற்குழு கூட்டம் 09-08-2014 அன்று அரியலூரில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட தலைவர் தோழர் சுந்தரவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தோழர்.பெரியசாமி AYL அவர்கள் அனைவரையும் வரவேற்றார். தோழர் பாலகுரு  அவர்கள் அஞ்சலியுரையாற்றினார். 
      25 கிளைசெயளர்கள், 17 மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 
     கிளை மாநாடுகள், மாவட்ட மாநாட்டு பங்களிப்பு, கேபிள் பழுது, உதிரி பொருள்கள்  பற்றாக்குறை, தனிநபர் மாற்றல்கள், முன்னால் பொருளர் தோழர். மனோகரன் அவர்கள் கணக்குகளை / வைப்பு நிதியை ஒப்படைக்காதது, ஒப்பந்த ஊழியர் பிரச்சனைகள்  ஆகியவை விவாதத்தின் மைய பொருளாக இருந்தது. 
மாவட்ட சங்க பொறுப்பாளர் தோழர். ஆறுமுகம் அவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழாவும் நடைபெற்றது.
      நிறைவாக மாவட்ட செயலர் தோழர்.பழனியப்பன் அவர்கள்  தோழர்களின் வினாக்களுக்கு பதிலளித்து தொகுப்புரையாற்றினார். 
     கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

1. மாவட்ட செயற்குழுவை சிறப்பாக நடத்திய அரியலூர் கிளையை செயற்குழு பாராட்டுகிறது.
2. மாவட்ட மாநாட்டை புதுக்கோட்டை கிளை ஏற்று நடத்தும்.
3. இரண்டு ஆண்டுக்கு மேலாக மாநாடு நடத்தாத கீழ்க்கண்ட கிளைகள் செப்டம்பர் 15-குள் மாநாட்டை நடத்தவேண்டும்.
      ஆலங்குடி, அறந்தாங்கி, அரியலூர், ஜெயங்கொண்டம், மணப்பறை, புதுக்கோட்டை, ஸ்ரீரங்கம், துறையூர், திருச்சி-கண்டோன்மென்ட், திருச்சி-GM அலுவலகம், திருச்சி-காட்டூர்-திருவெறும்பூர், திருச்சி-தில்லைநகர், திருச்சி-EWSD -1(ஆட்டோ)
4. தோழர்.மனோகரன் அவர்கள் 15 நாட்களுக்குள் கணக்குகளை மாவட்ட சங்கத்திடம் ஒப்படைக்க செயற்குழு வலியுறுத்துகிறது. 
5. ஒப்பந்த ஊழியர்களின் பணி நேரத்தை 6 மணியிலிருந்து 8 மணி நேரமாக உயர்த்த மாவட்ட நிவாகத்தை இச்செயற்குழு கோருகிறது.
6. கரூர், திருச்சி நகர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கேபிள் பழுதுகளை உடன் சரி செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க  மாவட்ட நிவாகத்தை இச்செயற்குழு கோருகிறது.
7. அரியலூர் தோழர்.கந்தன் தாக்கப்பட்ட பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் காலதாமதத்தை  தவித்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஆகஸ்ட் 4 வது வாரத்தில் மாவட்டம் தழுவிய தீவிர போராட்டத்தை நடத்துவது. 
     செயற்குழு பதிவுகளை பார்க்க இங்கே  சொடுக்கவும்.. .  More Photos

No comments: