ஆலங்குடி கிளை மாநாடு!
ஆலங்குடி கிளை மாநாடு 19-08-2014 அன்று மாலை 05:00 மணியளவில் ஆலங்குடியில் சிறப்பாக நடைபெற்றது.
கிளை தலைவர் தோழர்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் வந்திருந்த அனைவரையும் கிளை செயலர் தோழர். அருணாசலம் வரவேற்றார்.
,புதுக்கோட்டை, கீரனூர், அறந்தாங்கி, பொன்னமராவதி ஆகிய கிளைகளில் இருந்து திரளாக தோழர்கள் கலந்துகொண்டனர்.
மாவட்ட துணை தலைவர் தோழர். ஆசைதம்பி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார்.
புதுக்கோட்டை ராஜேந்திரன், முத்து, கீரனூர் ஹென்றி, நல்லையா, அறந்தாங்கி பாலு, அமல்ராஜ், பொன்னமராவதி ராஜேந்திரன், மாவட்ட துணை செயலர் தோழர். மில்டன், மாவட்ட செயலர் பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.
தோழர்கள். அருணாசலம், முருகப்பன், செல்வராஜ் ஆகியோர் முறையே தலைவர், செயலர்,பொருளாராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர். முருகப்பன் நன்றி கூற விழா நிறைவுபெற்றது.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment