Thursday, July 23, 2015

மாவட்ட மாநாட்டு தயாரிப்பு கூட்டம்!

ஆகஸ்ட் -13 ம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட மாநாட்டை நடத்தும் புதுக்கோட்டை கிளையில் அதன் தயாரிப்பு கூட்டம் 20-07-2015 அன்று  நடைபெற்றது.
கிளை தலைவர் தோழர். முத்து அவர்கள் தலைமையில் நடைபெற்ற  கூட்டத்தில் கிளை செயலர் தோழர். ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். 
மாவட்ட தலைவர் மற்றும் மாநாட்டு குழு செயலர் தோழர். ஆசைதம்பி இதுவரை நடந்துள்ள மாநாட்டு வேலைகளையும் மாநாட்டை சிறப்பாக நடத்துவதற்கான திட்டமிடலையும் எடுத்துரைத்தார் . 
கூட்டத்தில் புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தை சார்ந்த 5 கிளைகளில் இருந்தும் தோழர்கள் கலந்துகொண்டு மாநாடு சிறக்க தங்களது கருத்துக்களை கூறினார்.
மாவட்ட செயலர் பழனியப்பன், துணை செயலர்கள் மில்டன், மாதவன், அமைப்பு செயலர் அருள்தாஸ், கிளை செயலர்கள் கீரனூர். ஹென்றி, அறந்தாங்கி. பவுல்ராஜ், ஆலங்குடி. முருகப்பன், பொன்னமாரவதி துணை செயலர் ராஜேந்திரன் மூத்த தோழர். அறந்தாங்கி சேதுபதி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை கூறினார்.
புதுகை தோழர்கள் பொருளாகவும், நிதியாகவும் தங்களது உணர்வுபூர்வமான பங்களிப்பை செலுத்த, சிறப்பான ஒரு ஒற்றுமையான மாநாடாக நடத்தும் முடிவுடன் கூட்டம் நிறைவுபெற்றது.















No comments: