Wednesday, July 1, 2015

தோழர். பிரசாத்!



பிரசாத் என அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் தோழர். கேசவ பிரசாத் அவர்கள் 30-06-2015 அன்று பணி ஒய்வு பெற்றார். கடலூர் ரகு அவர்களின் செயலாற்றளால் ஈர்க்கப்பட்டு நமது இயக்கத்தில் இணைந்த அவர், திருச்சி GM அலுவலகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக நமது சங்க நலன்களுக்காக அர்பணிப்பு உணர்வுடன் பணியாற்றியவர். தோழர்.RV அவர்களுடன் இணைந்து பணியாற்றி மாவட்டம் முழுதும் நன்கு பரிச்சயமான தோழர். 

எளிமையாக, அமைதியாக, எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மாவட்டத்தின் பெரிய கிளையான GM அலுவலக கிளையின் செயலராக நீண்டகாலம் பணியாற்றியவர். நமது இயக்கத்தின் அனைத்து போராட்டங்களிலும் தவறாமல் கலந்துகொண்டு அதன் வெற்றிக்கு கடுமையாக உழைத்தவர். 
ஒய்வு பெறபோவதை காரணம் காட்டி புரட்சி பேசும் சிலர் விடுப்பில் ஓடி ஒளிந்துகொண்ட போதிலும் ஏப்ரல் 21,22 கலந்து கொண்டு போராட்டம் வெற்றி பெற முக்கிய காராணமாக இருந்த உண்மை தோழர். 

இந்த முன்மாதிரி தோழனின் பணி  ஒய்வு காலம் எல்ல நலன்களுடனும் சிறப்புடன் அமைய மாவட்ட சங்கத்தின் சார்பில் வாழ்த்துகிறோம்.

No comments: