Wednesday, June 29, 2016

தொழுது கேட்கும் தொப்புள் கொடி உறவு!

    தனக்கும் தனது தொழிற்சங்கத்திற்குமான உறவை தொப்புள் கொடி  உறவாக  மதிக்கும் மேண்மையான தோழன்
வேணு. சீனிவாசன்


தோழர். முத்தியாலு, தோழர். ஜெகன் ஆகியோருடன் இணைந்து தீவிரமாக சங்கபணி ஆற்றியவர்.. திருச்சி GM அலுவலக கிளையின் செயலராக நீண்ட நாட்கள் பணியாற்றியவர். மிக சிறந்த மனித நேயம் மிக்க தோழர். "BSNL தாய் மாமன்" என திருச்சி நகர் பகுதி தோழர்களால் அன்பாக அழைக்கப்படுபவர். 
    அவர் இம்மாதம் பணி நிறைவு பெறுகிறார். தொப்புள் கொடி உறவை போற்றும் விதமாக தனது பணி நாளில் ஒரு நாளைக்கு ஒரு ரூபாய் என சேமித்து, Rs. 14543 -ஐ சங்கத்திற்கு தந்து, அவரின்  தொடர் விருப்பமான சங்க ஒற்றுமையை கோருகிறார். அவர் மாவட்ட செயலருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி இதோ...   

முழு கடிதமும் படிக்க இங்கே சொடுக்கவும்   1   2

விடை பெரும் போது தாய்மாமன் சீர் என திருச்சி நகரில் அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கி புதுமை படைத்துள்ளார். 



அவரது விருப்பத்தை நிறைவேற்ற மாவட்ட சங்கம் உறுதியளிக்கின்றது. 
பணி ஓய்வு காலம்  சிறக்க வாழ்த்துகிறது.


No comments: