Sunday, February 3, 2013

பணி ஓய்வு பாராட்டு விழாக்கள் !


   அரியலூரில் 31-01-2013 அன்று நமது சங்கத்தின் நீண்ட நாள் உறுப்பினர்  தோழர்  சுந்தரமூர்த்தி,TTA அவர்களுக்கு கிளை சங்கத்தின் சார்பாக பணி ஓய்வு பாராட்டு விழா நடத்தப்பட்டது.  இளைய தோழர் கார்த்தி, TTA அவர்களுக்கு திருச்சி மாற்றலானதை ஒட்டி வழியனுப்பு விழாவும் இணைந்து நடத்தப்பட்டது. விழாவில் சம்மேளன செயலர் தோழர் ஜெயராமன், மூத்த தோழர் RV, மாவட்ட செயலர் பழனியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் தோழர்கள் ஆறுமுகம், மாரிமுத்து, ரெங்கநாதன், சண்முகம் மற்றும் முன்னணி தோழர் செல்வராஜ் உள்ளிட்ட அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த 50கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். கிளை செயலர் தோழர் பெரியசாமி சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

மாவட்ட அமைப்பு செயலர் தோழர். SM. முகிலரசன், 31-01-2013 அன்று பணி ஓய்வு பெற்றார். அன்று அவர் ஏற்பாடு செய்திருந்த விழாவில்  மாவட்ட தலைவர் சுந்தரவேல், மாவட்ட துணை செயலர் மில்டன் உள்ளிட்ட மாவட்ட சங்க பொறுப்பாளர்கள், கிளை செயலர்கள் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள்  கலந்து  கொண்டு  தங்களது  வாழ்த்துகளை    தெரிவித்தனர்.  

பணி ஓய்வு பெற்ற அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் சார்பான வாழ்த்துக்கள்!

No comments: