Monday, February 4, 2013

துணை பொது மேலாளர் (நிதி) அவர்களுடன் சந்திப்பு.

துணை பொது மேலாளர் (நிதி) அவர்களுடன் 02-02-2013 அன்று, மாவட்ட செயலர் பழனியப்பன், மற்றும் துணை செயலர் பாலகுரு ஆகியோர் சந்தித்து ஊழியர் பிரச்சனைகள் குறித்து விவாதித்தனர்.

1. ஊழியர்களின் ஊதியத்தில் வங்கி கடன், சொசைட்டி ஆகியவற்றிகாக பிடிக்கப்படும் தொகை உரிய நேரத்தில் செலுதபடுவதிலை. இதனால் பலர் அபராத வட்டி காட்டவேண்டியுள்ளது. இது பல முறை சுட்டி காட்டப்பட்டும் உரிய தீர்வு ஏற்படவில்லை என்பதை விவாதித்தோம்.  DGM  (F ) அவர்கள் ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதிக்குள் செலுத்த நவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

2. BSNL - MOU மூலம் வங்கி கடன் பெற்று ஊதியத்தில் பிடித்தம் செய்யபடுபவர்களை தவிர மற்றவர்கள், தற்போதுள்ள வங்கியை மாற்றி வேறு வங்கி மூலம் ஊதியம் பெற விரும்பினால், அதற்கு வங்கி NOC தேவையில்லை என்ற நமது கோரிக்கை ஏற்கப்பட்டது.

3. புதுகை தோழர் சுரேந்திரன் அவர்களின் ஊதிய நிர்ணய பிரச்சனையில்    (01-10-2000) அவருக்கு பல ஆயிரங்கள் பிடித்தம் செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர் மேல் முறையீடு செய்துள்ளதாலும் பெப்ரவரி மாதம் ஓயவு பெற இருப்பதால் பிடித்தத்தை நிறுத்திவைக்க கோரினோம்.  பரிசீலிக்க எற்றுகொண்டுளார்.

No comments: