Tuesday, February 19, 2013

புதுக்கோட்டை-ல் துணை பொது செயலர் கலந்துகொண்ட எழுச்சிமிகு கூட்ட பதிவுகள்!




ஒங்கோல் தேசிய செயற்குழு முடிவுகள் மற்றும் 20,21 அகில இந்திய வேலை நிறுத்த கோரிக்கை விளக்க கூட்டம் புதுக்கோட்டை-ல் 18-02-2013 அன்று மிக சிறப்பாக நடத்தப்பட்டது.  நமது

துணை பொது செயலர் தோழர் CK மதிவாணன், அவர்கள் 

கலந்து கொண்டு எழுச்சிமிக்க விளக்கவுரையாற்றினார். ஒங்கோல் செயற்குழுவில் NFTE சங்கத்தை பெரும்பான்மை ஊழியர்களின் ஆதரவை பெற்ற முதன்மை அங்கீகார சங்கமாக மாற்ற தீட்டிய திட்டங்கள், அகில இந்திய அளவில் NFTE -க்கு  சாதகமான  கள நிலைமைகள் ஆகியவற்றை விளக்கினார். 20, 21 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள வேலைநிறுத்தம் எனபது சுதந்திர இந்தியாவில் 
அணைத்து மதிய தொழிற்சங்கங்கள் கலந்துகொள்ள உள்ள சுமார் 10 கோடி பேர் கலந்துகொள்ளவுள்ள மாபெரும் வேலைநிறுத்தம். இந்திய நாட்டின் சகல பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கும் 
இன்றைய மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளை மாற்ற இப்போராட்டம் முக்கிய பங்காற்றும். இதில் அனைவரும் பங்கேற்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசினார். 
          இக்கூட்டத்தில் மாவட்ட செயலர் பழனியப்பன், பொருளர் ஆறுமுகம்,  மாவட்ட துணை செயலர்கள் மில்டன், பாலகுரு, மாதவன், அமைப்பு செயலர் அருள்தாஸ், துணை தலைவர் ஜெயராஜ், AIBSNLOA  சங்கத்தின் தோழர்கள் காமராஜ், பூபதி, கிளை செயலர்கள் ஹென்றி, பொன்னையா, அருணாசலம், உள்ளிட்ட அறந்தை, ஆலங்குடி, பொன்னமராவதி, கீரனூர் திருச்சி கிளைகளின் 100-க்கும் மேற்பட்ட தோழர் தோழியர்கள் கலந்துகொண்டனர். கூட்ட ஏற்பாடுகளை காவட்ட துணை தலைவர் ஆசைதம்பி, புதுகை கிளை செயளர் ராஜேந்திரன்,  தலைவர் முத்து, பொருளர் சண்முகம் கீரனூர் கிளை துணை செயலர் வேலு உள்ளிட்ட தோழர்கள் 
மிக சிறப்பாக செய்திருந்தனர்.       

No comments: