Tuesday, March 5, 2013

05-03-2013 மாவட்ட செயற்குழு பதிவுகள்!










6 வது சரிபார்ப்பு தேர்தலுக்கான செயல் திட்டமிடல் நோக்கோடு மாவட்ட செயற்குழு கூட்டம் புதுக்கோட்டை-ல் சிறப்பான முறையில் நடத்தப்பட்டது. புதுக்கோட்டை கிளையின் தோழர்கள் ஆசைதம்பி, ராஜேந்திரன், முத்து, சண்முகம், வி.வேலு, ஸ்ரீநிவாசன், சௌந்தரராஜன், நீல கிருஷ்ணன் உள்ளிட்ட தோழர்கள் சிறந்த முறையில் நடத்தி கொடுத்தனர். பெரும்பான்மையான கிளை செயலர்கள், மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர்.

             மாவட்ட தலைவர் தோழர் சுந்தரவேல் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தோழர்.பாலகுரு அஞ்சலியுரையாற்ற தோழர் மில்டன் வரவேற்புரையாற்றினார். புதிய அங்கீகார விதிகளின் சாராம்சம், தேர்தல் செயல்திட்ட முன்மொழிவுகள், நிதி வசூல் நம் முன் உள்ள சவால்கள் கடைமைகள் பற்றி மாவட்ட செயலர் பழனியப்பன் அறிமுக்வுரையாற்றினார். கிளை செயலர்கள், மாவட்ட சங்க பொறுப்பாளர்கள்  மிக்க தங்கள் பகுதி கள நிலைமைகள் கூடுதல் வாக்குகள் பெறுவதற்கான வாய்ப்புகள் பற்றி விளக்கினர்.
             செயற்குழுவில் SNATTA அமைப்பின் மாவட்ட செயலர் தோழர். முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துக்களையும் வரும் சரிபார்ப்பு தேர்தலில் NFTE -க்கு தங்கள் அமைப்பின் ஆதரவையும் பலத்த கரவொலியிடையெ அறிவித்தார்.

            மாநில சங்க பொறுப்பாளர்கள் தோழர்கள் சுந்தரம், மனோகரன் ஆகியோர் தேர்தலில் நமது கடைமைகள்,  BSNLEU  சங்கத்தின் இயலாமை பற்றி எடுத்துரைத்தனர.
       முன்னாள் மாவட்ட தலைவர் தோழர் VPK அவர்கள் கலந்துகொண்டு தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். 
        அரியலூர் ஜெயகொண்டம் கிளைகளின் சார்பில் ஒரு போஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டது.
         செயற்குழுவில் சென்ற மாதம் ஒய்வு பெற்ற மாவட்ட சங்க பொறுப்பாளர் தோழர் முகிலரசன் அவர்களுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. 
        நிறைவாக மாவட்ட பொருளர் நன்றி கூறினார். 

கீழ்க்கண்ட முடிவுகள் செயற்குழுவில் நிறைவெற்ற பட்டது. 

1. ஐந்து வருவாய் மாவட்ட அளவில் தேர்தல் பணிகுழுக்கள் அமைக்கப்பட்டது.
2. மாவட்ட சங்க பொறுப்பாளர்கள் ரூ 500 நன்கொடை அளிக்கவேண்டும்.
3. ஒவ்வொரு உறுப்பினரும் ரூ.100 தேர்தல் நன்கொடை அளிக்கவேண்டும். 
4. பிரச்னை வாரியாக சிறிய அளவில் நோட்டீஸ் கொண்டுவருவது.
5. கிளை வாரியாக கூட்டங்களும் ஊழியர் நேரடி சந்திப்பும் நடத்துவது.
8.மகளிர் தினத்தை சிறப்பான முறையில் அனுசரிப்பது.

NFTE சங்கத்தை முதன்மை அங்கீகர சங்கமாக மாற்றுவது, தமிழக அளவில் அதிக வாக்குகளை பெற்ற முதன்மை சங்கமாக மீண்டும் ஆக்குவது என்ற சூளுரையுடன் செயற்குழு முடிந்தது. 

No comments: