Thursday, March 7, 2013


மகளிர் தினம்!

மதியில் கால் வைத்து 
மகத்துவம் யாம் படைத்த போதினும்,
மிதிபட்டு  கொண்டு தான் இருக்கிறோம்
மாதராய் பிறந்தமையால்...

திருமண சந்தையில்  - சீர்
திருத்தும் இன்னும் வரவில்லை1

லட்சங்கள் விலைபேசும் கண்களுக்கு பெண்
இலட்சியங்கள் தெரிவதில்லை......

பால் மணம் மாறா பருவ -
பாலியல் பலாத்காரம் குறையவில்லை?!

பேதையாய்  நிற்கும் பெண்ணை
போதையாய் பார்க்கும் அவலம் அகலவில்லை !!

மங்கையரின் பெருமை பாடுவார்
மகவை பெண் பிறந்தாலோ வசைமொழிவர்......

ஆணாதிக்க சமுகத்தில்  - அடிமையாய்
அகதியாய் பெண் நிலை தாழ்வு !

தாய்மையின் தியாகத்தில் 
தன்னிறைவாய் நம் வாழ்வு.

தன்-நலம் மறந்து,
தனித்துவம் துறந்து....

மரமாகி நிற்பதலோ,
மார்தட்டி கொண்டாடுகிறோம்
மகளிர் தினத்தை??

அதுவும் சரிதான்!,

ஒதுக்கபட்டவர்க்கு தானே
ஓர் தினம் அனுசரிக்கபடுகிறது!

No comments: