மகளிர் தினம்!
மதியில் கால் வைத்து
மகத்துவம் யாம் படைத்த போதினும்,
மிதிபட்டு கொண்டு தான்
இருக்கிறோம்
மாதராய் பிறந்தமையால்...
திருமண சந்தையில் -
சீர்
திருத்தும் இன்னும் வரவில்லை1
லட்சங்கள் விலைபேசும் கண்களுக்கு
பெண்
இலட்சியங்கள் தெரிவதில்லை......
பால் மணம் மாறா பருவ
-
பாலியல் பலாத்காரம் குறையவில்லை?!
பேதையாய் நிற்கும்
பெண்ணை
போதையாய் பார்க்கும் அவலம் அகலவில்லை !!
மங்கையரின்
பெருமை பாடுவார்
மகவை பெண் பிறந்தாலோ
வசைமொழிவர்......
ஆணாதிக்க சமுகத்தில் - அடிமையாய்
அகதியாய் பெண் நிலை
தாழ்வு !
தாய்மையின் தியாகத்தில்
தன்னிறைவாய் நம் வாழ்வு.
தன்-நலம் மறந்து,
தனித்துவம்
துறந்து....
மரமாகி நிற்பதலோ,
மார்தட்டி கொண்டாடுகிறோம்
மகளிர் தினத்தை??
அதுவும்
சரிதான்!,
ஒதுக்கபட்டவர்க்கு தானே
ஓர் தினம்
அனுசரிக்கபடுகிறது!
No comments:
Post a Comment