ஆசிரியரின் நினைவாய்!
எழு பிறப்பையும்
ஏற்றம் பெற்றதாய்
உழலும் நெஞ்சை
உறுதி உள்ளதாய்
தழைக்கும் எண்ணம்
தனிச் சிறப்பாய்
உழைக்கும் எண்ணத்தை
உள்ளத்தில் ஊட்டலாய்
இழைந்த மனமாய்
என்றும் உள்ளதாய் - எம் உள்ளத்திற்கும்
நுழைந்த கடவுளே..!
நும் வழி காட்டலால்
பிழைத்தேன் உலகில்
பரவச ஆனந்தத்தில்
திளைத்தேன் மனதினில்
கற்ற கல்வியை
கருத்துடன் நல்கச்செய்தாய்
பெற்ற அறிவை
பேணி வளர்க்க செய்தாய்
நிற்றல் என்பதை
நினைவில் பதித்தாய் (வாழ்வில்)
நற்செயல் அனைத்தையும்
நலமுறக் கற்ப்பித்தாய் - உன்னால்
வாழ்வைக் கற்றேன்
வளம்பல பெற்றேன்
ஊழ்வினை தந்த உன்னை
உலகம் உள்ளவரை
போற்றும் என் உள்ளம் - நன்றி
சாற்றும் என் உள்ளம்.
(05-09-2013-இன்று ஆசிரியர் தினம்.)
No comments:
Post a Comment