Tuesday, October 29, 2013

பொன்னமராவதி கிளை மாநாடு!

              நமது மாவட்டத்தின் துடிப்பான கிளைகளில் ஒன்றான பொன்னமராவதி கிளையின் மாநாடு 26-10-2013 அன்று மாலை 04:00 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது.
             தோழர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற அம்மாநாட்டில் மாவட்ட துணை செயலரும் அக்கிளையின் வழிகாட்டியுமான தோழர் நாகராஜன் தனது கவித்துவ பாணியில் வரவேற்புரை நல்கி துவக்கிவைத்தார்.
              கிளை செயலர் தோழர் நடராஜன் ஆண்டறிக்கை சமர்பிக்க, பொருளர் தோழர் பழனியப்பன் வரவு செலவு கணக்குகளை அளிக்க புதிய கிளை பொறுப்பாளர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
             மாநாட்டில் மாநில செயலர் தோழர் பட்டாபி சிறப்புரையாற்றினார்.
             மாநில துணை செயலர் தோழர்.சுந்தரம், துணை தலைவர். தோழர் மனோகரன், மாவட்ட தலைவர் தோழா.சுந்தரவேல், மாவட்ட செயலர் தோழர். பழனியப்பன், காரைக்குடி மாவட்ட செயலர் தோழர். மாரி, புதுச்சேரி மாவட்ட செயலர் காமராஜ் மற்றும் மாவட்ட, கிளை சங்க பொறுப்பாளர்கள் பலர் வாழ்த்துரை வழங்கினர்.
           நிறைவாக தோழர் ஆறு.ராஜேந்திரன் அவர்கள் நன்றியுரை கூற, செட்டிநாட்டு சிற்றுண்ண்டியுடன்  மாநாடு நிறைவு பெற்றது. 


மாநாட்டு பதிவுகள் சில (பதிவுகள் ARR). . .








மேலும் பதிவுகளை காண இங்கே சொடுக்கவும். . .

No comments: