Tuesday, January 28, 2014

 தோழர். KN.தங்கராஜ், கிளை செயலர், பெரம்பலூர்  - பணி  நிறைவு பாராட்டு விழா! மற்றும் கிளை ஆண்டுவிழா!


பெரம்பலூர் கிளையின் செயலர் தோழர். தங்கராஜ் அவர்கள் இம்மாதம் பணி  நிறைவு பெறுவதையொட்டி பெரம்பலூர் கிளையின் சார்பில் அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது.

            விழாவிற்கு பெரம்பலூர், அரியலூர், ஜெயன்கொண்டம், திருச்சி, கரூர், முசிறி, கடலூர், திட்டக்குடி, விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் இருந்து சுமார் 100 தோழர்கள் கலந்துகொண்டனர்.
           விழாவில் சம்மேளன செயலர் தோழர். ஜெயராமன், நமது தொழிற்சங்க வழிகாட்டி தோழர்.ஆர் .வி, பெரம்பலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலர் தோழர். ஞானசேகரன், AIBSNLOA அகில இந்திய அமைப்பு  செயலர் தோழர். குணசேகரன், அதன் மாவட்ட செயலர் தோழர்.காமராஜ், கடலூர் முன்னாள் மாவட்ட செயலர் தோழர்.சுந்தரமூர்த்தி, சேலம்.அன்பழகன், மயிலாடுதுறை தோழர்.பன்னீர்,  NFTE திருச்சி மாவட்ட செயலர் தோழர்.  பழனியப்பன்,மாவட்ட தலைவர் தோழர்.சுந்தரவேல், மாவட்ட பொருளர் தோழர்.ஆறுமுகம், துணை செயலர்கள் பாலகுரு, மில்டன், ஜவஹர், அமைப்பு செயலார் ஆறுமுகம், அரியலூர் பெரியசாமி, ஜயன்கொண்டம் செல்வராஜ், சண்முகம்,  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர். 
       நிறைவாக நடைபெற்ற கிளை ஆண்டுவிழாவில் தோழர்கள் ஜோசப், KM . செல்வராஜ், மனோகரன் ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.


மேலும் பதிவுகளை காண இங்கே சொடுக்கவும்.

No comments: