வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் வெல்லட்டும்!
ஊதிய உயர்வு பிரச்சினை, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் கொள்கையை கைவிட வேண்டும் எனப்து உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்றும் (10-02-2014) நாளையும் 2-நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நாடு முழு வதும் வங்கிஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா முழுவதும் 88 ஆயிரம் வங்கியில் பணியாற்றும் 9 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழகத்தில் 11 ஆயிரத்திற்கும்ம்மேற்பட்ட வங்கிகள் 1 லட்சம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்ததால் பணபரிமாற்றம் பெரிதும் பாதிக்கப்ட்டு உள்ளது பெருமபாலான ஏடிஎம்.களில் பணம் இல்லாமல் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
வங்கி ஊழியர்களின் போராட்டம் வெல்ல புரட்சிகர நல்வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம்!
No comments:
Post a Comment