Wednesday, January 7, 2015

வெற்றிகரமான முதல்நாள் தர்ணா!

அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் சார்பில் மூன்று நாள் தொடர் போராட்டத்தின் முதல் நாள் தர்ணா திருச்சி-ல் வெகு சிறப்பாக நடத்தப்பட்டது. திருச்சி மாவட்டத்தின் போராட்டகுழுவின் தலைவரும் NFTE மாவட்ட செயலருமான தோழர் S பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற தர்ணாவில் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்றும் கோரிக்கைகளை விளக்கியும் தோழர்.ஜெயகணேசன், மாவட்ட தலைவர்  SNEA பேசினார்.

தோழர்.அப்துல் சலாம் மாவட்ட தலைவர்AIBSNLEA,  தோழர்.சுந்தரவேல் மாவட்ட தலைவர் NFTE  தேவராஜன் மாவட்ட தலைவர்  BSNLEU, தோழர். இளங்கோவன், மாநில தலைவர்  TEPU , தோழர். அஸ்லம் பாஷா மாவட்ட செயலர் BSNLEU , தோழர். மோகன், மாவட்ட செயலர் AIBSNLEA, தோழர். ஜானகிராமன், மாவட்ட செயலர் SNEA, தோழர். ரவீந்திரன், TEPU, தோழர். பாலகுரு, மாவட்ட துணை செயலர் NFTE, தோழர். மல்லிகா, மாநில அமைப்பு செயலர் BSNLEU, , தோழர். சுப்ரமணியன், மாவட்ட துணை செயலர் BSNLEU,, உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தோழர். ஹென்றி, நன்றி கூற முழக்கங்குழுடன் தர்ணா முடிவடைந்தது.























No comments: