Tuesday, March 17, 2015

தோழர். S.சுந்தரவேல், குடும்ப நிவாரண நிதி!

அன்பார்ந்த தோழர்களே / நண்பர்களே!

       தில்லைநகர் தொலைபேசியகத்தில் TM ஆக பணியாற்றியவரும், NFTE தொழிற்சங்கத்தின் திருச்சி மாவட்ட தலைவராக செயலாற்றியவருமான தோழர்.S.சுந்தரவேல் அவர்களின் திடீர் மறைவு நமக்கெல்லாம் அதிர்ச்சியையும் ஆழ்ந்த துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
    அவரது மறைவால் செய்வதறியாது திகைத்து போயுள்ள அவரது மனைவி, கல்லுரிபடிப்பின் இறுதியில் இருக்கும் திருமணமாகாத அவரது மகள், தந்தையின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள வந்ததால் வெளிநாட்டு வேலையை இழந்து நிற்கும் அவரது மகன் என அவரது குடும்பமே நிலைகுலைந்துபோயுள்ளது. மகள், மகளின் மேல்படிப்பு செலவுகள், குடும்ப மருத்துவ செலவுகளுக்காக வங்கி, மதுரை சொசைட்டி, மற்றும் தனி நபர் கடன்கள் அவரது குடும்பத்தை தற்பொழுது மிகுந்த அச்சம்கொள்ள செய்துள்ளது. அவரது ஓய்வூதிய பலன்கள் ஏதும் மிஞ்சாது என்பதே இன்றைய சூழல்.
            பணிக்காலம் முழுதும் சக ஊழியர்களின், தோழர்களின் நலன்களுக்காக செயலாற்றிய ஒரு தோழனின் குடும்பம் மிகுந்த சிரமத்தில் இருக்கும் போது அந்த சிரமத்தை சிறிதேனும் போக்குமளவிற்கு உதவுவது தான் உண்மையான நட்பு, தோழமை மற்றும் மனிதாபிமானமாகும்.
    எனவே நண்பர்களே, தோழர்களே நம்மால் முடிந்த உதவிகளை செய்து நமது தோழனின் குடும்ப துயர் அகற்றுவோம்.
இவண்

                                                              நிவாரண குழு.

No comments: