Thursday, March 19, 2015

ERP தொல்லைகள் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்!

      மாநில சங்க அறைகூவலின் படி ERP அமலாக்கதால் ஏற்பட்டுள்ள தொல்லைகளை களைய வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் 19-03-2015 பிற்பகல் 01:30 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது.
      மாவட்ட துணை தலைவர் தோழர் ஆசைதம்பி அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்ட நிகழ்விற்கு தோழர் லோகநாதன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணை செயலர் தோழர். பாலகுரு கோரிக்கை முழக்கங்களை எழுப்பினார்.
      ERP அமலாக்கத்தால் திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள ஊழியர் பிரச்சனைகளை / பாதிப்புகளை விளக்கி மாநில துணைத்தலைவர் சுந்தரம், மாவட்டதுணை தலைவர் பாலகுரு, மாவட்ட செயலர் பழனியப்பன் விளக்கவுரையாற்றினர். நிறைவாக நிறைவாக மாவட்ட பொருளர் ஆறுமுகம் நன்றி கூறி ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

ஆர்ப்பாட்ட பதிவுகள் சில...










No comments: