ஏப்ரல் 21,22 வேலை நிறுத்த ஆயத்த கூட்டம் திருச்சி தில்லை நகர் கிளையில் சிறப்பாக நடத்தப்பட்டது. உறையூர் தொலைபேசியகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு NFTE மாவட்ட துணை செயலர் தோழர் பாலகுரு தலைமை வகித்தார். BSNLEUமாவட்ட துணை தலைவர் அனைவரையும் வரவேற்று பேசினார். தோழர். மோகன், மாவட்ட செயலர் AIBSNLEA, தோழர். அஸ்லம் பாஷா மாவட்ட செயலர் BSNLEU, தோழர். பழனியப்பன், மாவட்ட செயலர் NFTE ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தோழர். இளங்கோவன், மாவட்ட துணை செயலர் AIBSNLEA,அவர்கள் நன்றி கூறி முடித்து வைத்தார். தில்லை நகர், உறையூர், குமரன் நகர், அன்ன நகர், ஷண்முகா நகர் பகுதி தோழர்கள் திரளாக கலந்து கொண்டது பாராட்டுக்குரியது.
No comments:
Post a Comment