போராடிய தோழர்களின் பொற்பாதங்களை வணங்குவோம்!
எத்தனைமுறை போராட்டம் வந்தாலும்
சங்கப்பெருமை காப்போம்
நிறுவனம் காப்போம் என
சான்றுறைத்து, சம்பளம் வெட்டு என
பூச்சாண்டி காட்டினாலும்
சரி நிகர் என போராட்ட களத்தில்
போராடிய எங்கள் மாணிக்கங்களே
உங்கள் பாதம் பணிந்து வணங்குகின்றோம்.
போராட்ட அறிவிப்பு பார்த்தாலே
வைத்தியரிடம் கடிதம் பெற்று
தற்காலிக நோய் என போலிக்கடிதம் பெற்று,
தப்பித்ததாய் கற்பனை கொள்ளும்
தற்காலிக நோயாளிகள்
நிரந்தர நோயாளிகளாய் மாறும் முன்
சமூகத்தில் உள்ள நோய்களை பற்றி
கொஞ்சம் புரிந்து கொள்ளட்டும்.
ஒட்டுமொத்த இந்தியாவே வேலைநிறுத்தம்
செய்தாலும்,
இயக்கம் காக்க மறந்து
தன்னலம் தலைதூக்க
நிறுவனம் நலிந்தாலும் பரவாயில்லை
சுயநலம் நலியாது
சம்பள வெட்டு என பயந்து
ஒளிந்தவர்களே!
உங்கள் சந்ததியே
உங்களை மதிக்காது மன்னிக்காது
என வருந்துகிறோம்!
1 comment:
தோழர் மதியை தாக்க வந்த மதிகெட்டவர்களை தேவகோட்டை கிளை வன்மையாக கண்டிக்கின்றது. நமது சங்கத்தின் அனைத்து தோழர்களும் அனைத்து கிளைகளிலும் ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்திட வேண்டுகின்றோம் நன்றி
Post a Comment