பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
By அறந்தாங்கி,
First Published : 25 April 2015 05:39 AM IST
அறந்தாங்கி பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையம் எதிரில் தேசிய தொலைத் தொடர்பு ஊழியர் சம்மேளனத்தின் சென்னை மாநில செயலர் சி. கே. மதிவாணனை தாக்கியவர்களைக் கைது செய்யக்கோரி, சம்மேளன ஊழியர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அறந்தாங்கி கிளை துணைத் தலைவர் எஸ்.அருளானந்த் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைச் செயலாளர் எம்.மாதவன், மாவட்ட அமைப்புச்செயலாளர் எம்.எஸ்.அருள்தாஸ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க கிளை செயலாளர் அமல்ராஜ், மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட தொலைத்தொடர்பு ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment