Tuesday, September 29, 2015

நிறைவான அறந்தாங்கி கிளை மாநாடு!
அறந்தாங்கி கிளை மாநாடு 27-09-2015  அன்று சிறப்பாக நடைபெற்றது. அறந்தாங்கி கிளையின் பாரம்பரிய தன்மையுடன்  கூடிய முழு நாள் மாநாடாக நடைபெற்றது.
மாநில செயலர் தோழர்.பட்டாபி கிளை மாநாட்டை துவக்கி வைத்தார். சமீபத்தில் நடைபெற்ற போராட்டங்களால் ஏற்பட்டுள்ள விளைவுகள், பலன்கள், டவர் கம்பெனி உருவாக்கம், BSNL - MTNL  இணைப்பு, BB தனியார்மயம், எதிர்வரும் சரிபார்ப்பு தேர்தல், நமது கடமைகள் ஆகிய அனைத்து பற்றியும் விவரித்தார்.
கிளை மாநாட்டின் ஒரு பகுதியாக,  அறந்தாங்கி பகுதியில் பணியாற்றி ஒய்வு பெற்ற நம் தோழர்களுக்கு பணி ஒய்வு பாராட்டு விழா நடைபெற்றது. தோழர்களை வாழ்த்தி மாநில துணை செயலர் தோழர். சுந்தரம் அவர்கள் பேசி கௌரவித்தார்.
CPI மாவட்ட செயலர் தோழர். செங்கோடன், ஒன்றிய செயலர் தோழர். ராஜேந்திரன், விவசாய தொழிலாளர்கள்  சங்கத்தலைவர் தோழர். மாதவன், 
NFTE சங்க மாநில சங்க துணை தலைவர் தோழர். S மனோகரன், துணை செயலர் தோழர். நடராஜன், அமைப்பு செயலர் தோழர். மாரி 
மாவட்ட சங்க செயலர் தோழர். S பழனியப்பன், மாவட்ட பொருளர் தோழர். ஆண்டிசாமி, துணை தலைவர் தோழர். ஆசைதம்பி, 
புதுக்கோட்டை கிளை செயலர் தோழர். ராஜேந்திரன், கீரனூர் கிளை செயலர் தோழர். வில்லியம் ஹென்றி உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினார்.
நிறைவாக மாநில சங்க அமைப்பு செயலர் தோழர். P சண்முகம் அவர்கள் மாநாட்டு நிறைவுரையாற்றினார். NFTE சங்கத்தின் கடந்த கால  சாதனைகள், மீண்டும் அங்கீகார சங்கமாய் ஆன பிறகு ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், சரிபார்ப்பு தேர்தலில் நம்முன் உள்ள சவால்கள் கடமைகள் குறித்து நெல்லை தமிழில் மிக இயல்பாக பேசி அனைவரையும் கவர்ந்தார். 
கிளை பொருளர் தோழர். அஞ்சிமுத்து நன்றியுரை ஆற்றினார்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இம்மாநாட்டில் புதிய கிளை சங்க பொறுப்பாளர்களாக தோழர்கள் இன்னாசிமுத்து , இளங்கோவன், பாலசுப்ரமணியன் ஆகியோர் முறையே தலைவர், செயலர், பொருளாராக ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டனர்.













No comments: