Sunday, September 20, 2015

சிறப்பான தர்ணா போராட்டம்!

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் 65000 டவர்களைப் பிரித்து டவர் கார்ப்பரேசன் அமைக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி 16.09.2015 அன்று திருச்சி முதன்மை பொதுமேலாளர் அலுவலகத்தில்  தர்ணா போராட்டம் சிறப்பாக நடைபெற்றது.
பல தோழர்களின் இல்ல திருமண நிகழ்வுகள், பல்வேறு குடும்ப விழாக்கள் இருந்த பின்னணியிலும் தோழர்களின் பங்கேற்ப்பு சிறப்பாகவே இருந்தது.

NFTE மாவட்ட தலைவர் தோழர் சுந்தரம், BSNLEU மாவட்ட தலைவர் தோழர். தேவராஜன், SNEA மாவட்ட தலைவர் தோழர்.ஜெயகணேஷ் ஆகியோர் கூட்டு தலைமையில் தர்ணா நடைபெற்றது.

NFTE மாவட்ட செயலர் தோழர். பழனியப்பன், துணை செயலர் பாலகுரு, துணைத்தலைவர் தோழர்.பாலகிருஷ்ணன், தோழர். கரூர்.ஆறுமுகம், 
BSNLEU மாவட்ட செயலர் தோழர். அசலம் பாஷா, துணை தலைவர் சந்திர சேகரன், 
AIBSNLOA மாவட்ட செயலர் தோழர். ,காமராஜ், மாநில தலைவர் தோழர். குணசேகரன், 
AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் மோகன். மாவட்ட தலைவர் தோழர். அப்துல் சலாம்,
TEPU மாவட்ட செயலர் தோழர் ரவீந்திரன் 
SNEA மாவட்ட செயலர் தோழர் ஜானகிராமன், உள்ளிட்ட தோழர்கள் விளக்கவுரையாற்றினார். 
நிறைவாக NFTE மாவட்ட துணை செயலர் தோழர். நன்றியுரையாற்றி தர்ணா நிறைவு பெற்றது.















போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் புரட்சிகர  வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்!

No comments: